வீட்டு வேலையை தொழிலாக செய்யும் தாய் - மகனின் மருத்துவ கனவு நிறைவேறியது

வீட்டு வேலை செய்து வரும் தாய் ஒருவர், தனது மகனின் மருத்துவர் கனவை நிறைவேற்றி உள்ளார்.
வீட்டு வேலையை தொழிலாக செய்யும் தாய் - மகனின் மருத்துவ கனவு நிறைவேறியது
x
நெல்லை பழைய பேட்டையில் வசிக்கும் பாஸ்கர், மாநகராட்சி துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சிவசக்தி, அந்த பகுதி வீடுகளில் வேலைகள் செய்து வருகிறார். இவர்களது இளைய மகன் சுதாகர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளர். நீட் தேர்வு பயிற்சிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வரை செலவாகும் நிலையில், சிவசக்தி தனது நகைகளை விற்று மகனின் படிப்புக்கு கொடுத்துள்ளார். ஆனால் கடந்த ஆண்டு அவரால் நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இருப்பினும் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் இரண்டாம் முறை நீட் தேர்வுக்கு எழுதி 303 மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு,  நெல்லை மருத்துவ கல்லூரியில்  இடம் கிடைத்துள்ளது. தனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டதால், இதய சிறப்பு மருத்துவராக வேண்டும் என சுதாகர் தெரிவித்துள்ளார்.  




Next Story

மேலும் செய்திகள்