ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - தலைமை செயலக ஊழியர் கைது
x
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி

சென்னை ஆர்.கே நகரை  சேரந்த குணசேகரன் என்பவர் தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் பாலாஜி, விவேக் உள்ளிட்ட 8 பேரிடம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக  கூறி  தலா 3 லட்சம் என 24 லட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளார். பணம் கொடுத்த 8 பேருக்கும் போலி பணி நியமன ஆணையையும் கொடுத்துள்ளார். அந்த ஆணையை எடுத்து கொண்டு தலைமை செயலகம் சென்ற 8 பேருக்கும், அது போலி ஆவணம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில், குணசேகரனை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் 



Next Story

மேலும் செய்திகள்