முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
x


முட்டை கொள்முதலில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அசோக் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் அங்காடியை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சோதனை நடைபெற்று  வருவதாகவும், அதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். சோதனை நடத்த  வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது எனவும் வரிஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது என கூறினார். சோதனையில் மாநில அரசை தொடர்பு படுத்தக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்