மருத்துவமனையில் கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன்
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், திவாகரன் மகன் ஜெயானந்த் இன்று ஆஜராகி விளக்கமளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக தன்னிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட இரவு, சிகிச்சைக்குப் பின் கண்விழித்தபோது, அறைக்கு வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாகவும், ஜெயானந்த் தெரிவித்தார்.
We use cookies for analytics, advertising and to improve our site. You agree to our use of cookies by continuing to use our site. To know more, see our Cookie Policy and Cookie Settings.Ok