"சிறப்பு உணவு வழங்க கோரிய வழக்கு" - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ரின் மனு தள்ளுபடி

சிறையில் சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்குமாறு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ர் சுஷீல் குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிறப்பு உணவு வழங்க கோரிய வழக்கு - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ரின் மனு தள்ளுபடி
x
"சிறப்பு உணவு வழங்க கோரிய வழக்கு" - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ரின் மனு தள்ளுபடி 

சிறையில் சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்குமாறு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீர‌ர் சுஷீல் குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இளம் மல்யுத்த வீரர் சுஷீல் குமார் , சாஹர் ராணா கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கு சிறப்பு  ஊட்டச்சத்து உணவு வழங்கிட அனுமதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ,  சட்டத்தின் முன்பு ஜாதி, மதம், அந்தஸ்து உள்ளிட்ட அனைத்தையும் கடந்து  அனைவரும் சமமானவர்களே என தெரிவித்தார். எனவ, சுஷீல்குமாருக்கு சிறப்பு உணவு சலுகை வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, அவரது மனுவை நிராகரித்து தள்ளுபடி செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்