கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா விடுத்துள்ள அறிக்கையில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், வரும் 29ஆம் தேதி தொடங்கி இருந்த ஐ.பி.எல். போட்டிகளை வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்ய பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதே போன்று இந்தியா, தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்