தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : இந்திய வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசல்

தென்னாப்பிரிக்கா ஆணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசினார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : இந்திய வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசல்
x
தென்னாப்பிரிக்கா ஆணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசினார். ராஞ்சியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மாயங் அகர்வால், புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் ரோஹித் சர்மா, ரஹானே ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடி ரோஹித் சர்மா சதம் விளாசினார். 58 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய ​அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்த போது  மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் தடைப்பட்டது.ரோஹித் சர்மா 117 ரன்களுடனும், ரஹானே 83 ரன்கள் ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்