கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி : வெற்றி பெற்றவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி
10வது மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
10வது மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 15 மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். செமி கான்டாக்ட், லைட் கான்டக்ட், கிக் லைட், புல் கான்டாக்ட், லோ கிக் ஆகிய பிரிவுகளில் 7 வயது முதல் 40 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
Next Story