"உலகக் கோப்பையை வெல்லும் பலம் இந்தியாவுக்கு உள்ளது" - கபில்தேவ்

உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையை வெல்லும் பலம் இந்தியாவுக்கு உள்ளது - கபில்தேவ்
x
உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். கின்னஸ் சாதனையாக, உலகின் மிக நீளமான கிரிக்கெட் பேட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. ஆறாயிர​த்து 600 கிலோ எடையுள்ள இந்த கிரிக்கெட் பேட், வில்லோ மரத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 50 அடி நீளமுள்ள இந்த கிரிக்கெட் பேட், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை கபில்தேவ் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் விளையாடிய காலத்தை விட, தற்போது இந்திய அணி நேர்த்தியாகவும், பலம் வாய்ந்ததாகவும் உள்ளது என்றார். நடப்பு உலகக் கோப்பை தொடரில், மழையால் 4 போட்டிகள் ரத்தானது குறித்து என்ன செய்ய வேண்டும் என ஐ.சி.சி. யோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்