8வது முறையாக சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி

ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு 8வது முறையாக முன்னேறியது சென்னை....
x
ஐ.பி.எல். இரண்டாவது அரை இறுதிப் போட்டியில்  டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 'டாஸ்' வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பண்ட் 38 ரன்களும், முன்ரோ 27 ரன்களும் அடித்தனர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி சார்பில் டு ப்ளெஸிஸ்,வாட்சன் இருவரும் 50 ரன்கள் விளாசினர். இறுதியாக 19-வது ஓவர் முடிவில் வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்