இராணி கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்
இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி தடுமாறி வருகிறது.
இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி தடுமாறி வருகிறது. ரஞ்சி சாம்பியனும், மற்ற வீரர்கள் அடங்கிய இதர இந்திய அணி மோதும் போட்டியே இராணி கோப்பை ஆகும். இதில் டாஸ் வென்ற இதர இந்திய அணி கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.. தொடக்க வீரராக களமிறங்கிய மாயங் அகர்வால் அதிரடியாக விளையாடி 95 ரன்கள் சேர்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 13 ரன்களில் வெளியேற, விஹாரி மட்டும் பொறப்புடன் விளையாடி சதம் விளாசி,114 ரன்களில் வெளியேறினார். இதனால் இதர இந்திய அணி 330 ரன்களில் ஆட்டமிழந்தது.
Next Story