இந்தியா Vs நியூசி. இன்று கடைசி டி-20 போட்டி : தொடரை வெல்லப்போது யார்?

இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இருபது ஓவர் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs நியூசி. இன்று கடைசி டி-20 போட்டி : தொடரை வெல்லப்போது யார்?
x
இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான இருபது ஓவர் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. இதனால் தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் போட்டியில் செய்த தவறை திருத்திக் கொண்டு இந்தியா  சிறப்பாக விளையாடி 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி, இருபது ஓவர் தொடரை வென்று பழி தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணி வீரர்களும் வெற்றிக்கு போராடுவார்கள் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்