நியூசி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டு மண்ணில் தொடரையும் கைப்பற்றியது.
நியூசி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்தியா அபார வெற்றி
x
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டு மண்ணில் தொடரையும் கைப்பற்றியது. 

MOUNT MAUNGANI நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் முன்ரோ, குப்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சன் 28 ரன்களில் வெளியேறினார். சரிவிலிருந்து அணியை டைலர் 93 ரன்கள் விளாசியும்,  டாம் லாத்தம் 51 ரன்கள் எடுத்தும் மீட்டனர். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்வரிசையில் வந்த வீரர்களும் சொதப்பினர். இதனால் நியூசிலாந்து அணி 49வது ஓவரில் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்