இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியா அணி வெற்றி
x
சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் தவான் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் விராட் கோலி 3 ரன்னிலும்,  அம்பத்தி ராயிடு ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 133 ரன்களும், டோனி 51 ரன்களும் எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்