கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு பிசிசிஐ தடை

பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை விதித்துள்ளது.
x
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற இவ்விரு கிரிக்கெட் வீரர்களும், பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தனர். இது குறித்து விளக்கம் அளிக்கும்படி இரு வீரர்களுக்கும் பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் போட்டியில் பங்கேற்க பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய பின்பே தடையை நீட்டிப்பதா அல்லது  நீக்குவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு விதித்துள்ள தடையால் ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. 

Next Story

மேலும் செய்திகள்