மே.இ.தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 377 ரன்கள் குவிப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு 4வது ஒருநாள் போட்டியில் 378 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
மும்பையில் நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் தவான் 38 ரன்களிலும், கேப்டன் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடி தனது 21வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்த அவர் 162 ரன்களில் ஆட்டமிழக்க, அம்பத்தி ராயுடு சதம் விளாசி ரன் அவுட் ஆனார். தோனி 23 ரன்களில் வெளியேற 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.
Next Story