3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
x
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 329 ரன்களை எடுத்து அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராத் கோலி, 97 ரன்கள் எடுத்தார். 

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து, 161 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணி 168 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில், 352 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. 520 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், அடுத்தடுத்து அவுட்டாகினர். அந்த அணி, 317 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 


Next Story

மேலும் செய்திகள்