பிப்.24 - ஜெயலலிதா 73- வது பிறந்தநாள்...அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 73 வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24 ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம், அறிவித்துள்ளது.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 73 வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24 ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம், அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், மற்றும் இணை  ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் மரியாதை செலுத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது. பின்னர் இருவரும் பிறந்த நாள் விழா சிறப்பு மலலை வெளியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன், இந்நிகழ்வில் அதிமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்