நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை :"நாடாளுமன்ற கண்ணியத்தை சிதைப்பதாக உள்ளது" - மாயாவதி பாய்ச்சல்

மாநிலங்களவையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நடந்து கொள்ளும் விதம், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்குவதாக, பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை :நாடாளுமன்ற கண்ணியத்தை சிதைப்பதாக உள்ளது - மாயாவதி பாய்ச்சல்
x
மாநிலங்களவையில் மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் நடந்து கொள்ளும் விதம், நாடாளுமன்றத்தின்  கண்ணியத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்குவதாக, பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டி உள்ளார். ஜனநாயகத்தின் கோவில் நாடாளுமன்றம் என வர்ணிக்கப்பட்டாலும், பலமுறை அதன் கண்ணியம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக மாயாவதி பதிவிட்டுள்ளார். தற்போது அரசும், எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ளும் விதம், நாடாளுமன்றம், அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் மாண்பை குலைப்பதாக உள்ளதாகவும், இது மிகவும் வருத்தம் தரும் நிகழ்வு என மாயாவதி விமர்சித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்