அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் : "எந்த நேரத்திலும் கையெழுத்திட இந்தியா தயார்" - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நாளையே கையெழுத்திட தாம் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் : எந்த நேரத்திலும் கையெழுத்திட இந்தியா தயார் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
x
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நாளையே கையெழுத்திட தாம் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் குஜராத் வந்த போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்க வேண்டும் என்றும், சில சிறிய அளவிலான திருத்தங்களால் தள்ளிப்போனதாகவும் தெரிவித்துள்ள பியூஸ்கோயல், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த ஒரு சில வாரங்களிலோ  ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவித்தார். இதுதொடர்பான முடிவை அமெரிக்க பிரதிநிதி வசம் விட்டு விடுவதாகவும் தெரிவித்துள்ள பியூஸ் கோயல், இருநாடுகள் இடையிலான பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களுக்கு இது அடிப்படையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்