"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து
கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது. வழக்கம் போல விமான நிலைய ஓடு பாதையில் விமானங்கள் தரையிறங்குவதும், மேலெழும் காட்சிகளை பார்க்க முடிகிறது. 2 மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்தும் உள்நாட்டு விமான சேவையை தொடங்கிய நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது வலைதளப் பக்கத்தில், "வானில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்! " என பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார். வான்வெளி பாதை மும்முரமாகியுள்ள அழகான நேரலை காட்சிகளை 'ஃபிளைட் ரேடார் 24' செயலி படம் பிடித்துள்ளது எனவும் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
Next Story