டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம்:"உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்"- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை

டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் விவாதம்:உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும்- திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை
x
டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக எம்.பி.  டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், தற்போது நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு பற்றி இந்தியா மட்டுமின்றி, இங்கிலாந்து, இந்தோனேஷியா, ஈரான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தினால்தான் இந்த வன்முறை ஏற்பட்டது எனவும் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் பாஜக ஆதரவாளர்கள் எனவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்