மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல்: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சீனிவாசனிடம் மூவரும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு 13ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Next Story