தி.மு.க. உடன் கைகோர்த்த பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியா?

2021-ல் நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுக்கு பணியாற்ற பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தமாகி உள்ளார்.
தி.மு.க. உடன் கைகோர்த்த பிரசாந்த் கிஷோர் - தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியா?
x
பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர், பெரும்பான்மையுடன் வலுவுடன் ஆட்சிக்கு வர மூளையாக செயல்பட்ட ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தற்போது தி.மு.க.வுக்கு பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளார். இதை திமுக தலைவர் ஸ்டாலினின் டுவிட்டர் பதிவும் உறுதி செய்துள்ளது. தேர்தலுக்கு கட்சியை தயாராக்குவது, வியூகம், தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயல்பாடு, மக்கள் சந்திப்பில் வித்தியாசம் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி வெற்றிக்கு அழைத்துச் செல்வது இவரது பணி என்பது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்