"அதிமுக எம்பிக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் : காரை வழிமறித்து கோஷமிட்டதால் பரபரப்பு"

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாருக்கு கருப்புக்கொடி காட்டி சாலை மறியல் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
x
தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அதிமுக எம்பி  ரவீந்திரநாத் குமாருக்கு இஸ்லாமிய அமைப்பினர் கருப்பு கொடி காட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரின் தடுப்பையும் மீறி 50க்கும் மேற்பட்டோர் அவர் சென்ற காரை வழி மறித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  உடனடியாக போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.  பின்னர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்