ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மேல் முறையீடு : விசாரணை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக, நவம்பர் 25 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக, நவம்பர் 25 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 90 நாட்களுக்கு மேல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
Next Story