"கருத்து வேறுபாடின்றி உள்ளாட்சி தேர்தலில் செயல்படுவோம்" - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கருத்து வேறுபாடின்றி உள்ளாட்சி தேர்தலில் செயல்படுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
x
கருத்து வேறுபாடின்றி உள்ளாட்சி தேர்தலில் செயல்படுவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை யானைக்கவுனியில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக சார்பில் உதயநிதியை மேயர் பதவிக்காக முன்மொழிந்துள்ளதாகவும், ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து வேறாக உள்ளதாகவும் கூறினார். இருப்பினும் உள்ளாட்சி தேர்தலுக்காக கூட்டணி கட்சிகள் ஜனநாயக முறைப்படி அமர்ந்து பேசி கருத்து வேறுபாடின்றி செயல்படுவோம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்