"3 நாள் ஆளுநரிடம் காலஅவகாசம் கோரியுள்ளோம்" - அஜித்பவார்

காங்கிரஸ் தலைவர் மும்பையில் இல்லாத நிலையில், ஆளுநரிடம் 3 நாள் ஆட்சி அமைப்பது தொடர்பாக கால அவகாசம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
3 நாள் ஆளுநரிடம் காலஅவகாசம் கோரியுள்ளோம் - அஜித்பவார்
x
காங்கிரஸ் தலைவர் மும்பையில் இல்லாத நிலையில், ஆளுநரிடம் 3 நாள் ஆட்சி அமைப்பது தொடர்பாக கால அவகாசம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஒய்.பி.சவான் மையத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஆட்சி அமைக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள கால அவகாசம் கோரி உள்ளதாகவும், கட்சியை உடைக்க யாராவது முயன்றால்  3 கட்சியும் பொதுவான ஒருவரை முதலமைச்சராக முன்னிறுத்துவோம் என்றும் தெரிவித்தார். யாரும் எங்களை தோற்கடிக்க முடியாது என்றும் அஜித்பவார் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனிடையே, குடியரசுத் தலைவர் ஆட்சியை பிறப்பித்ததற்கு எதிராக புதிய மனு எதையும் இன்று தாக்கல் செய்யப்போவதில்லை என சிவசேனா வழக்கறிஞர் சுனி​ல் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்