ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் மனோகர் லால் கட்டாரை சந்தித்து தமிழ்ச்சங்க நிர்வாகிகள் ஆதரவு

ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்- ஐ சந்தித்து ஹரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
x
ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்- ஐ சந்தித்து, ஹரியானா தமிழ் சங்க நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். குருகிராம் மற்றும் சண்டிகர் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் தமிழர்கள் சார்பாக தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். அப்போது, ஹரியானாவில் வாழும் தமிழர்களுக்கு உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் பஞ்ச்குலா பகுதியில் வாழும் தமிழர்களுக்கு மனைப் பட்டா பெறுவதில் உள்ள சிக்கல் போன்றவற்றை  தீர்க்க வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். ஹரியானா மாநிலத்தில் சுமார் 80 ஆயிரம்  தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்