இடைத்தேர்தல் : 90 பேர் விருப்பம் - அதிமுக நேர்காணல்

நாங்குநேரி - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்த பிரமுகர்களிடம் அதிமுக உயர்மட்டக்குழு, நேர்காணல் நடத்தியது.
இடைத்தேர்தல் : 90 பேர் விருப்பம் - அதிமுக நேர்காணல்
x
சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி - காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிட, மொத்தம் 90 பேர் விருப்ப மனு அளித்த நிலையில், அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர் அறிவிப்பு பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்