"வீட்டு காவல் தலைவர்கள் குடும்பத்தினரை விடுவிக்க நடவடிக்கை" - மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டு காவல் தலைவர்கள் குடும்பத்தினரை விடுவிக்க நடவடிக்கை - மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை
x
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில், ஜம்மு- காஷ்மீர் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித தண்டனை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்