முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு
x
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதன் விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்