தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி

தண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்
தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி
x
அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட அஞ்சூர், துக்காச்சி , கார்வழி உள்ளிட்ட பகுதிகளில் கரூர் எம்பி ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆகியோர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை எனவும் அது தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியாமல், மாவட்ட ஆட்சியர் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தியது மிகப்பெரிய தவறு என்றும் ஜோதிமணி குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்