கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன் வைத்த கோரிக்கைகள்...

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முன் வைத்த கோரிக்கைகள்.
கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன் வைத்த கோரிக்கைகள்...
x
அ.தி.மு.கவில் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க 11 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மக்களவை தேர்தல் தோல்விக்கான காரணத்தை பொறுப்பாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அ.தி.மு.க அவை தலைவர் மதுசூதனன், தொண்டர்கள் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி, தேர்தலில் அ.தி.மு.க-தோல்வி அடைந்ததற்கு தி.மு.கவின் பொய் பிரசாரமே காரணம் எனக் குற்றம்சாட்டினார். தோல்வியில் கற்ற பாடத்தை கவனத்தில் கொண்டு, உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்