சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி, நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி பெற்றார் திருமாவளவன்
சிதம்பரம் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தி.மு.க. கூட்டணி சார்பில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது முதலே சிதம்பரம் தொகுதியில் இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக சிதம்பரம் தொகுதி தமிழக அரசியலில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 3 ஆயிரத்து 219 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
Next Story