அகிலேஷ், மாயாவதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். உத்தர பிரதேச தலைநகரான லக்னோவில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடு, முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பிற கட்சி தலைவர்களையும், சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வருகிறார்.
Next Story