தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது - முத்தரசன்

தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
x
பா.ஜ.க.வுடன் ஸ்டாலின் பேசி வருவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை பொய் பேசியது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளை மேம்படுத்தக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துக் கொண்டது நட்பு ரீதியாக என்று திமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை முத்தரசன் சுட்டிக்காட்டினார். பாஜகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக தமிழிசை கூறியிருப்பது பொய்யான தகவல் எனவும், பொய்களை கூறி பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தேர்தலில் வெற்றி அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதாக முத்தரசன் குற்றம் சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்