குடிநீர் பிரச்னை நிலவும் இடங்களை நேரில் ஆய்வு செய்தார் தமிழிசை

குலசேகரநல்லூரில் குடிநீர் பிரச்சினை நிலவும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழிசை.
x
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த குலசேகரநல்லூரில், நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து தந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பான நீரும் நிலமும் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த பிரச்சினையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று, சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். தேர்தலுக்கு பிறகு குலசேகரநல்லூர் பகுதியில் சிறுநீரகக் கோளாறு சிகிச்சைக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும் என தமிழிசை கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்