மோடி அரசு கவிழ்ந்து ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் - ஸ்டாலின்

வாக்கு எண்ணிக்கைக்கு பின் மோடி அரசு கவிழ்ந்து ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளார்.
x
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து  ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அந்த தொகுதிக்குட்பட்ட மலைக் கோவிலூரில் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின் வேலம்பாடி, இனுங்கனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது மக்களிடையே வாக்கு சேகரித்தார். பள்ளப்பட்டியில் பேசிய ஸ்டாலின், இஸ்லாமிய மக்களுக்கும் , திமுகவுக்கும் நெருங்கிய உறவு உள்ளதாக கூறினார். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் கட்சி திமுக என்று கூறிய ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கைக்கு பின் மோடி அரசு கவிழ்ந்து ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்