வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்

ரமலான் நோன்பை முன்னிட்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரிய வழக்கில், நேரத்தை மாற்ற வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்.
வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்
x
ரமலான் நோன்பை முன்னிட்டு காலை 7 மணிக்கு தொடங்க உள்ள வாக்குப்பதிவை, காலை 4  அல்லது 5 மணிக்கு தொடங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு, தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. இந்த நிலையில், வாக்கு பதிவு  நேரத்தை மாற்ற இயலாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சியுள்ளதால், நேரத்தை மாற்ற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்