தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் - வைகோ

தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு
x
மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் இலக்கிய தாசன், சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மானாமதுரை தேவர் சிலை அருகே வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை மோடி வஞ்சிக்கிறார் என்றார். மதக் கலவரங்களை தூண்டும் வகையில் பேசும் நபர்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று  வைகோ கேள்வி எழுப்பினார். மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்ததால் ஏழை எளிய மாணவர்களின் கனவு தகர்க்கப்பட்டது என்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக துப்பாக்கிச் சூடு  நடத்தியதற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் வைகோகுற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்