தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் : சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் பயணம்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், தமிழகத்தில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
x
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருப்பதால், தமிழகத்தில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் களம் களை கட்டியுள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

* தேனி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக காலையில் பிரசாரத்தை துவக்கிய ,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,  விருதுநகர் மற்றும்  திண்டுக்கல்  மக்களவை தொகுதி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரிக்கிறார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீ்ர் செல்வம் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளிலும் விளாத்திக்குளம் சட்டப்பேரவை தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் பிரசாரத்தை துவக்கினார். 

* பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்