"காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம்" - ஜி.கே.வாசன்

காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என தேர்தல் பிரசாரத்தில் போது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஆர்.காந்தி மற்றும் த.மா.கா சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் என்.ஆர்.நடராஜன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என சபதமேற்று கொண்டிருக்கிற குமாரசாமி அரசுக்கு சாமரசம் வீசும் கட்சியாக காங்கிரஸ் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். தண்ணீர் கிடைக்காததற்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் துணைபோகிற கட்சியாக திமுக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்