தமிழகம், புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவு...

மக்களவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.
x
மக்களவை மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த 19 ஆம் தேதி துவங்கியது. இதில், மக்களவை ​தே​ர்தலுக்கு 900-க்கும் மேற்பட்டோரும், சட்டமன்ற தேர்தலுக்கு 350-க்கும் மேற்பட்டோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுக்கள் நாளை, தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில், பரிசீலனை செய்யப்பட உள்ளது. வருகிற 28, 29 ஆகிய தேதிகளில், வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் ஆகும். பின்னர், 29 ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்