"மக்கள் நீதி மய்யம் எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது" - கமல்ஹாசன்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்
x
மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலத்தை யாரும் கணிக்க முடியாது என, அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யம் காணாமல் போய்விடும் என்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, தங்களின் எதிர்காலத்தை அவர்கள்  கணிக்க முடியாது என கமல்ஹாசன் தெரிவித்தார். கட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லையே  என்ற கேள்விக்கு, மாநாட்டில் இது குறித்து விளக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்