"பொள்ளாச்சி குற்றவாளிகளை அரசு தப்ப விடாது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

அதிமுக கூட்டணி, மத்திய அரசை நிர்ணயிக்கும் வெற்றி கூட்டணி என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.
பொள்ளாச்சி குற்றவாளிகளை அரசு தப்ப விடாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி
x
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் வழிபட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக கூட்டணி, மத்திய அரசை நிர்ணயிக்கும் வெற்றி கூட்டணி என்றார். காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை எடப்பாடி அரசு தப்ப விடாது என்றும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்கியே தீரும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்