அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் : இன்றும், நாளையும் சென்னையில் நடக்கிறது

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு சென்னையில் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.
x
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நேர்காணல் தொடங்கியது. காலையில் சேலம், கள்ளக்குறிச்சி,  கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, விழுப்புரம் ஆகிய 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது. இன்று பிற்பகல் 10 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதேபோல் நாளை காலை 10 தொகுதிகளுக்கும் நாளை பிற்பகல் 9 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கிறது. இந்த நேர்காணலில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்