"மோடியின் பேச்சே அவருக்கு எதிராக மாறும்" - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

"மோடியை வெளியேற்ற மக்கள் முடிவு"
x
பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் பிரசாரம் மட்டுமே செய்ததாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். ஆதரவற்ற பெண் குழந்தைகளின் வளர்ச்சி திட்ட கட்டடத்துக்கு புதுநகர் பகுதியில் அடிக்கல் நாட்டிய அவர் இவ்வாறு கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில்  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறுவதற்கு ஆதாரம் கேட்டால், எதிர்கட்சிகள் தேசவிரோத செயலில் ஈடுபடுவதாக கூறுவது தவறானது என்றார். ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு 21 அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்ததை பாராட்ட வேண்டும் என நாராயணசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்