கூட்டணி பேரம் பேசும் தமிழக அரசியல் அழிவுப் பாதைக்கு வந்துவிட்டது - பழ. கருப்பையா

ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் தமிழக அரசியல், அழிவுப் பாதைக்கு வந்துவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா கூறியுள்ளார்.
x
ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேசும் தமிழக அரசியல், அழிவுப் பாதைக்கு வந்துவிட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா கூறியுள்ளார். சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார். யார் ஊழல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினோமோ, அவர்களிடமே கூட்டணி பேசுவது ஜனநாயக அழிவு என்றார். யார் நன்மை செய்வார் என முடிவு எடுக்காமல், பேரத்தின் அடிப்படையில் கூட்டணி பேசிவருகிறார்கள் என்று பழ.கருப்பையா விமர்சித்தார். தென்னாட்டில் பாஜக கால்பதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்