நாங்கள் என்றும் மக்களுடனே கூட்டணி - அமைச்சர் செல்லூர் ராஜூ

நாங்கள் என்றும் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
மதுரையில் வேளாண்மைத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், பயிர் காப்பீடு இழப்பீடு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்கு தான் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தேர்தல் காலத்தில் வருவதெல்லாம் கொள்கை கூட்டணி கிடையாது என்றும் நாங்கள் என்றும் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்